இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான கம்பெனி செக்யூரிட்டி எக்ஸிக்யூட்டி நுழைவுத் தேர்வை நடத்த உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தற்போது விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளன. வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் விண்ணப்பித்த அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தேர்வு நடத்துவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்த தேர்வுக்கு பதிவு செய்ய தகுதி உடையவர்கள். மேலும் தேர்வு மையத்தில் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், பேனா, பென்சில், நோட்புக் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.