சாதி, மத பாகுபாடு காட்டியிருந்தால். தேர்தலில் தமக்கு வாக்களிக்க தேவையில்லை என்று நாக்பூர் மக்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாக்பூர் தொகுதி பணிகளிலோ, தலித்துகள், முஸ்லிம்களிடமோ பாகுபாடு காட்டியதாக கருதினால் வாக்களிக்க வேண்டாம், உண்மையாக பணியாற்றியிருந்தால் வாக்களியுங்கள் என்றார்.