உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 60 வாக்காளர்களுக்கும் குறைவாக நான்கு வாக்குச் சாவடிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 11,729 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.