மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலமாக கைதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருடன் போன் மூலமாக பேசலாம். இதனை பயன்படுத்தி வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பேச முடியும். அதுவும் சுமார் ஆறு நிமிடங்கள் வரை மட்டுமே பேச கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரா மத்திய சிறையில் உள்ள 650 கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.