மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த மாதம் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த தொகை சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்துடன் வரவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூன்று மாத நிலுவைத் தொகையுடன் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.