ஈரோடு மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரனுக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். அப்போது ஈஸ்வரன் சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசினார். கடந்த 2019-ஆம் ஆண்டு தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஈஸ்வரன் சிறுமியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் ஈஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.