அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்தன் வினோத்குமாருக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.