பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது குறைந்துவிட்டது. கடந்த வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராதியா பச்சனுடன் மட்டும் அடிக்கடி விழாக்களில் கலந்து கொள்வதால் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்யப் போவதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில் தற்போது ப்ரோ கபடி லீக் போட்டி ஒன்றில் ஜெய்ப்பூர் பிங்க் பிராந்தர்ஸ் அணி விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக் பச்சனின் சகோதரி ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயிடம் ஏதோ கூற அவர் கோபத்தில் கண்களை உருட்டி உருட்டி பார்க்கிறார். அதோடு உறவினர் மீதும் ஐஸ்வர்யா ராய் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.