பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து ADMK அலுவலகத்திற்கு சென்ற EPS-க்கு தொண்டர் ஒருவர் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கினார். அதனை EPS வாங்கி அணிந்துக்கொண்டு எம்ஜிஆர் தோற்றத்தில் காட்சியளித்தார்.

இந்நிலையில் தொப்பி, கருப்பு கண்ணாடி போட்டவர்கள் எல்லாம் எம்ஜிஆரா என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். தமிழக அரசியலில் நீண்டகால அனுபவத்தில் சொல்கிறேன். கருப்பு எம்.ஜி.ஆர் என்று ஒருவர் வந்தார். சிகப்பு எம்ஜிஆர் என்று ஒருவர் வந்தார். இப்படி பல எம்ஜிஆர்கள் வந்துள்ளனர். தொப்பி கூலிங் கிளாஸ் போட்டவர்கள் எல்லாம் எம்ஜிஆர் என்றால் நாளை நீங்களோ நானோ கூட எம்ஜிஆர் ஆக மாறலாம்.