இயந்திர கோளாறால் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து பால் அனுப்புவதில் இன்று தாமதம் ஏற்பட்டது. இதற்கு இயந்திர கோளாறு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இயந்திர கோளாறால் பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.