திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை லக்கான் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தையல் தொழிலாளி. கடந்த மாதம் 18-ஆம் தேதி வடமதுரை அரசு மதுபான கடை அருகே கருப்பையா நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கருப்பையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கருப்பையா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பையா கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவி கற்பகத்தை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.