நாகலாந்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு மார்ச் 2-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வரும் தேர்தலில் பெண்டாங்கோக்பா இம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும், ஷபோ கொன்யாக் தெஹோக் தொகுதியிலும் போட்டியிடுவார். இரண்டு தொகுதிகளும் பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.