சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பை ஏற்பட்டு வரும் நிலையில் டெல்லியில் 6 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஹான் என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே திடீரென உடல்நல பாதிப்பு அவருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில், மேற்கொண்ட பிரேத பரிசோதனையில்,  சிறுவன் மயோர்கார்டிடிஸ் (மயோர்கார்டிடிஸ் என்பது இதயத்தின் தசை திசுக்களான மயோர்கார்டியத்தின் வீக்கத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு மருத்துவ நிலை. வீக்கமானது இதயத் தசைகள் சரியாகச் செயல்படும் திறனைப் பாதிக்கும் மற்றும் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்) என்னும் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.