நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே கனமழை பெய்து பொதுமக்களை பெரிதும் பாதித்து வரும் நிலையில், கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, இடி மின்னல் தாக்குதல் என சில இயற்கை சீற்றங்களினால் பலர் படுகாயம் அடைந்தும், சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்த சூழ்நிலையில்,
அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் இடி மின்னல் தாக்கியதில் சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தனது X தளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ગુજરાતના વિવિધ શહેરોમાં ખરાબ હવામાન અને વીજળી પડવાને કારણે અનેક લોકોના મોતના સમાચારથી ખૂબ જ દુઃખ અનુભવુ છું. આ દુર્ઘટનામાં જેમણે પોતાના પ્રિયજનોને ગુમાવ્યા છે તેમની ન પૂરી શકાય તેવી ખોટ પર હું તેમના પ્રત્યે મારી ઊંડી સંવેદના વ્યક્ત કરું છું. સ્થાનિક વહીવટીતંત્ર રાહત કાર્યમાં…
— Amit Shah (@AmitShah) November 26, 2023