தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் மார்ச் ஒன்றாம் நாள் தனது தனது 70 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். இந்த நாள் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டாட்டமாக அமையப் போகிறது. தலைமை கழகத்தின் சார்பாக சென்னை நந்தனம் ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற மார்ச் ஒன்றாம் தேதி மாலை 5 மணி அளவில் திராவிட நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது எழுபதாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்த விழாவில் கழக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார். இதில் இந்திய தலைவர்கள் அணிவகுக்க  இருக்கின்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மரியாதைக்குரிய மல்லிகார்ஜூன் கார்கே அவர்களும், சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்திரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் அவர்களும், ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் காஷ்மீர் மாநிலம் முன்னாள் முதலமைச்சருமான பருக் அப்துல்லா அவர்களும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும்  பீகார் மாநில துணை முதலமைச்சர் ஆன தேஜஸ்வினி யாதவ் அவர்களும் வருகை தந்து முதலமைச்சரை வாழ்த்த இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை ஆற்றிட சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை கழகத்தின் சார்பாக மேற்கொள்வார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான  பிறந்தநாளாகவும் அமையப்போகிறது என தெரிவித்துள்ளார்.