ராணுவ வீரர் பிரபு கொலைக்கு நீதி கேட்டு நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியின்  சேதப்படுத்தப்பட்ட கார், கட்சி நிதியில் இருந்து சரி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மீண்டும் சேதப்படுத்தினால் புது கார் வாங்கி தரப்படும்.

புது காரையும் சேதப்படுத்தினால் ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்கப்படும் என அவர் கூறினார். கடந்த வாரம் தடா பெரியசாமி வீட்டின் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.