
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை உடனே அப்புறப்படுத்தி வருகின்றனர். கொட்டும் மலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நேரம் காலம் பார்க்காமல் நம் துயர் துடைக்க களம் காணும் அனைத்து பணியாளர்களுடன் நானும் முன் களவீரனாக துணை நிற்பேன் என முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.