7-ஆவது  டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்களாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை சேர்ந்த சந்தோஷ் ஷிவ் மற்றும் மதன் குமார் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்நிலையில் சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்து திருச்சி அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.