சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 8.1.2023 மற்றும் 9.1.2023 ஆகிய நாட்களில் தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேலை லேசான பனிமுட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் 10.1.2023 முதல் 12.1.2023 வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இருக்கக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.