கிளப்கள், மதுபான விற்பனைக் கூடங்களில் CCTV கேமரா பொருத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், CCTV பொருத்த உத்தரவிட்ட டாஸ்மாக் நிர்வாகம்,அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டினால், உரிமத்தை ரத்து செய்வதுடன், அதற்காக செலுத்திய தொகையும் திரும்ப வழங்கப்படாது என எச்சரித்துள்ளது.