நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 12ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான துணைத் தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துணைத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேர்வு நடைபெறும் என்பது குறித்த பட்டியலையும் சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற இருக்கும் மாணவர்கள் இந்த துணை தேர்வை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.