இந்தியாவில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தனித் தேர்வுகளாக எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தாமாக கட்டணம் இல்லாமல் அக்டோபர் 18ஆம் தேதி வரையிலும் அபராத கட்டணத்துடன் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட தேதிக்கு பிறகு நான்கு நாட்களுக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை கருதி விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் நிறைவடைவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.