தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் வைகை புயல் வடிவேலு. அதன் பிறகு நடிகர் விஜயகாந்த்தும், வடிவேலு சின்ன கவுண்டர் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த் தன்னுடைய பல படங்களில் வடிவேலுவை பரிந்துரை செய்தார். அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருந்த வடிவேலு மற்றும் நடிகர் விஜயகாந்த் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். அதாவது திமுக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் சென்ற வைகைப்புயல் வடிவேலு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விஜயகாந்தை தாக்கி பேசினார்.

இந்நிலையில் வடிவேலு மற்றும் விஜயகாந்த் இடையே என்ன பிரச்சனை என்பது குறித்து தற்போது நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது வடிவேலுவின் அலுவலகம் பக்கத்தில் நடிகர் விஜயகாந்தின் அக்கா வீடு இருக்கிறதாம். நடிகர் விஜயகாந்தின் அக்காவின் கணவர் இறந்தபோது துக்க வீட்டிற்கு வந்தவர்கள் நடிகர் வடிவேலுவின் அலுவலகத்திற்கு முன் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதைப் பார்த்து நடிகர் வடிவேலு மிகவும் கோபப்பட்டாராம். சாவு வீட்டுக்கு வந்தவர்கள் என்று கூட பாராமல் அவர்களிடம் சண்டைக்கு சென்றாராம். மேலும் இதில் இருந்துதான் நடிகர் வடிவேலு மற்றும் விஜயகாந்த் இடையே பிரச்சனை வந்திருக்கலாம் என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.