தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் மீனா. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை மீனா நடித்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த வருடம் உயிரிழந்தார். கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் பரவியது. அண்மையில் நடிகர் தனுஷ் மற்றும் மீனா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியது.

இந்நிலையில் நடிகை மீனா தன் இரண்டாம் திருமணம் குறித்து பேசி உள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தன்னுடைய கணவர் இன்னும் இந்த உலகத்தில் இல்லை என்பதே அவரால் நம்ப முடியவில்லையாம். அப்படி இருக்கும்போது எப்படி இரண்டாம் திருமணத்தைப் பற்றி யோசிக்க முடியும். நான் தற்போது என் மகளின் எதிர்காலம் மற்றும் படங்களை தேர்வு செய்வது போன்றவற்றில் தான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை மீனா சொன்னதாக கூறும் விஷயம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.