தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திசா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். வரலாற்று பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் சூர்யா 42 படத்தின் டைட்டில் வீடியோ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய தாய் தந்தையை பிரிந்து தற்போது மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி குடியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜோதிகா தற்போது ஹிந்தி வெப் தொடரில் நடிக்கிறார். அதன் பிறகு நடிகை ஜோதிகா தன் கணவரை பாலிவுட்டில் பெரிய ஹீரோவாக மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதால் மும்பைக்கு அவரை அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிள்ளைகளின் படிப்புக்காக தான் சூர்யா மும்பை சென்றதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதில் எது உண்மை என்பதை தெரியவில்லை. மேலும் நடிகர் சூர்யா நிரந்தரமாக மும்பையில் செட்டிலாக போகிறாரா அல்லது தற்காலிகமாக குடியேறி இருக்கிறாரா என்ற விவரமும் வெளிவரவில்லை.