வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற 25 வயது இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் தேசியக் கொடி மற்றும் போஸ்டர்களைச் சாலைகளில் ஒட்டி, அவற்றைத் தங்கள் காலணிகளாலும் வாகனங்களாலும் மிதித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
Chhatarpur: Angry crowd stages protest against Bangladesh for attack on Hindus#MadhyaPradesh #MPNews #FreePressMP pic.twitter.com/WuJhT5fASD
— Free Press Madhya Pradesh (@FreePressMP) December 25, 2025
மேலும், நகரின் பொதுக் கழிவறைகளிலும் வங்கதேசத்திற்கு எதிரான போஸ்டர்களை ஒட்டி இளைஞர்கள் தங்களின் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
சத்தர்பூர் நகரின் முக்கிய இடமான சத்ரசால் சதுக்கத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வங்கதேச அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். “மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க வங்கதேச அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்த இளம்பெண் கொலை தொடர்பாக வங்கதேச போலீஸார் இதுவரை 12 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்துக்களுக்கு எதிரான வன்முறை நீடிப்பது இந்திய மக்கள் மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
