தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் தமிழக பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த தொடர் சம்பவங்கள் தமிழக பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவில் இருந்து விளகுபவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

கூட்டணி தர்மத்தை மீறி பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது சரியல்ல என எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாஜக இளைஞரணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.