குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில் செயலியை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. CAA 2019 என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.