ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேற்று வெளியிடப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அச்சாணியாக திகழும் என்று தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாத திமுக மெரினாவில் சிலை வைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.

மெரினாவில் வைக்க உள்ள பேனா சிலையால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என்பதால் சிலை வைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் ஆளுங்கட்சிகள் அதிகார பலத்தாலும் பண பலத்தாலும் வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெளியாகும் முடிவு திமுகவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.