பிரபல தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘வ்ருஷகர்மா’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நாக சைத்தன்யா, மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர முயன்றபோது, எதிர்பாராதவிதமாக நாற்காலி சரிந்ததால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அங்கிருந்த படக்குழுவினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
#Watch | ‘வ்ருஷகர்மா’ பட விழாவில் நாற்காலியில் அமர்ந்தபோது திடீரென கீழே விழுந்த நடிகர் நாக சைத்தன்யா!#SunNews | #NagaChaitanya | #Vrushakarma pic.twitter.com/Lgl6dq6acF
— Sun News (@sunnewstamil) March 5, 2026
உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவருக்கு உதவினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நாக சைத்தன்யாவிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. கீழே விழுந்த போதிலும் மிகுந்த நிதானத்துடன் சிரித்தபடியே எழுந்த அவர், மீண்டும் மற்றொரு நாற்காலியில் அமர்ந்து விழாவைத் தொடர்ந்தார். தனது தொழில்முறை கண்ணியத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தச் சம்பவத்தைப் பொருட்படுத்தாமல் படத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
