நான்கு IAS அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜெக்டே நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியராக இருந்த அருணா, நீலகிரி ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் அமிரித், நில நிர்வாகத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் உளவுத்துறை செயலாளராக இருந்த நந்தகோபால், ஆவண காப்பக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.