தேமுதிகவில் இருந்து விலகி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், சேலம் மாவட்ட துணை செயலாளர் K கமலாகருப்பண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல், ஓபிஎஸ் பக்கம் இருந்த சிலரும் மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய இபிஎஸ், தேர்தல் பணிகளை உடனே செய்ய அறிவுறுத்தினார்.