வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்தாண்டு வங்கக்கடலில் ஏற்கெனவே 2 புயல்கள் உருவான நிலையில், 3வது முறையாக உருவான புயலுக்கு மிதிலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய காரணங்களால் தென் மாவட்டத்தை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.