சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, அவருக்கு உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் காரணமாக சிறப்பு குழுவினர் காலையிலேயே சிகிச்சையை தொடங்கிய நிலையில், பித்தப்பையில் கல் இருப்பது உறுதியாகியுள்ளது.