நாளை நடைபெறும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கிறது. சேலத்தில் இருந்து இன்று சென்னை திரும்பும் இபிஎஸ், சிறப்பு கூட்டம் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளைய கூட்டத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சம்பவம் நடக்க இருக்கிறது. அதுமட்டுமல்ல, மீண்டும் ஓபிஎஸ் இருக்கை விவகாரம் குறித்து இபிஎஸ் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளார்.