இந்தியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகமாக நிலவுகிறது. அதிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகின்றது. இதனை அதிக கவனத்துடன் கையாள வேண்டும் என்று இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதனைப் போலவே உத்திரபிரதேசம் மாநிலத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.