தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் காரைக்காலில் அரசு பள்ளி மாணவர் ராகவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோல்விக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வு கிடையாது. மாணவர்கள் முடியாது என்று நினைத்து தவறான முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம். இந்த முறை தோற்றால் கட்டாயம் அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருங்கள். இது போன்ற முடிவை யாரும் எடுக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.