ஏப்.10க்கு பிறகு திமுக அதிமுக ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேர்ந்து, கோவையில் என்னை தோற்கடிக்க போராடும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். குளுமையாக இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம் என குற்றம் சாட்டிய அவர், டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கிக் கொடுப்பவர் இபிஎஸ்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்கக் கூடாது என்று சாடினார்.