தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் 1-3ம் வகுப்புக்கு செப்.23 -அக்.2ம் தேதி வரை 10 நாட்களுக்கும், 4-12ம் வகுப்புக்கு செப்.28-அக்2 வரை ( மாற்றம் இல்லாமல்) 5 நாட்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், 4-12ம் வகுப்புக்கான விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.