தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை அதிகரித்து உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக கரையோரங்களில் சுமார் 1.79 லட்சம் குடும்பங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் முதல் ஜூன் வரை 60 நாட்கள் தடைகாலம் கடைபிடிக்கப் படுவதால் இதுவரை 5000 நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. அது இனி 8000ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது