வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிகு அமைச்சர் ஏவ. வேலு, சாத்தான்குளம் மற்றும் காயல்பட்டணம் பகுதியில் அமைச்சர் பி. மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு  அமைச்சர் கே.என் நேரு, தூத்துக்குடி இதர பகுதிகள் ராஜ கண்ணப்பன் கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.