EVM வாக்குகளுடன் பதிவாகும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நடைமுறையை கண்மூடித்தனமாக வெறுப்பது தேவையற்ற சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்று கூறிய நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் EVM இல் உள்ள மைக்ரோ கண்ட்ரோலை சோதிக்க வேட்பாளர் அனுமதி கூறலாம் என தெரிவித்துள்ளது.