செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுக முக்கிய புள்ளிகளின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று மதியம் முதல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 18 மணி நேரம் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ED திட்டமிட்டுள்ளது