வருமானவரித் துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டது. வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது.
வருமானவரித்துறை தீர்ப்பாய உத்தரவை அடுத்து வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு வருமான வரியை தாமதமாக செலுத்தியதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தது.

வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையீடு செய்ததை தொடர்ந்து வங்கி கணக்குகள் செயல்பட தொடங்கின. அடுத்த விசாரணை நடைபெறும் வரை வங்கி கணக்குகளை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.