பொங்கல் பரிசுத் தொகுப்பு & ₹1000 ரொக்கம் பெற, இன்று முதல் வீடுவீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பி.ஒ.எஸ். எந்திரம் மூலம் விரல்ரேகை கட்டாயம் வைக்க வேண்டும்; விரல் ரேகையை சரிவர பதிய இல்லாதோர் கையொப்பம் போட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல்ரேகை, கையொப்பத்தை சரிபார்த்த பின் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.