கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அரவைப் பருவத்திற்கு கம்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், முன்னெப்போதும் இல்லாத அளவில் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.