தமிழகம் முழுவதிலும் இருந்து ரூ.17.60 கோடி மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அரிசி, உளுந்து, பெட்ஷீட்கள், துணிமணிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது