தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் டிச.18ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், டிச.16இல் புதுக்கோட்டை, தஞ்சை திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை, சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது