ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானதாக ராஜஸ்தான் பேரவை செயலாளரான தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.