தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேசிவரும் நிலையில், இலங்கை அரசின் அறிவுறுத்தலின் பேரில் 15 பேரை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது